மும்பையில் ஒரு வீட்டில் வானொலியில் இருந்த குண்டு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்துபயங்கரவாத எதிர்ப்பு அணியினர் விரைந்து வானொலி மற்றும் பேட்டரிகள் பறிமுதல் செய்து, விசாரனையை தொடங்கியுள்ளனர்.
இன்று காலை மும்பையில் அரசு பேருந்து நடத்துனர் நிம்பல்கர் என்பவரது வீட்டில் வானொலி வெடித்தது, இதில் அந்த வீட்டிலிருந்த நான்கு பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் இந்த குண்டு வெடிப்பில் நிம்பல்கரின் மனைவியின் பார்வையை இழந்ததாக கூறப்பட்டுள்ளது.
வானொலி வெடித்த சத்தம் சம்பவ இடத்திலிருந்து சுமார் 3 கீ.மீ வரை ஒலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணையில், நடத்துனர் நிம்பல்கர் நேற்று இரவு பேருந்தை முமபை- அம்பெக்ஜாய் பேருந்து நிலையத்தில் நிறுத்தும் போது, ஒரு வானொலி இருந்ததை கண்டதாகவும். ஆனால் பயணிகள் யாரும் அதனை கேட்டு வராததால் அதனை வீட்டுக்கு எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வானொலியை இயக்க முயன்ற போது அதனுடைய பேட்டரியை அதில் சரியாக பொறுத்த முயன்றதாகவும். அப்போது அந்த வானொலி திடீரென வெடித்து சிதறியதாக கூறியுள்ளார்.
குண்டு வெடித்த இடத்திலிருந்து வானொலி மற்றும் அதன் பேட்டரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சதியா என்ற நோக்கத்தில் விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்ஆர் பாட்டீல் இந்த சம்பவம் தொடர்பாக புலன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் மும்பையின் புறநகர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.