Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு: நிராகரித்தார் ரீட்டா

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (20:07 IST)
லக்னோ: உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பை ஏற்க அவர் மறுத் துவிட்டார். இது மாயாவதியின் அரசியல் நாடகம் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

தனது வீட்டை மாயாவதியின் ஆட்கள் தான் தாக்கியதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரலாம் என்றும் ரீட்டா கூறியிருந்தார்.

இந்நிலையில், ரீட்டாவின் இல்லத்தில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்பு வழங்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இதை ஏற்க முடியாது என்று ரீட்டா இன்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 15ஆம் தேதி மாயாவதி குறித்து கடுமையாக கருத்து தெரிவித்ததாக ரீட்டா கைது செய்யப்பட்டார். அதே நாளில் அவரது இல்லத்தில் சில மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments