டெல்லி: தேர்தலில் வாக்களிப்பதின் உரிமையை ஊக்குவிக்க தேர்தல் கமிஷனின் ஊக்குவிப்பாளர்களாக ஒலிம்பிக் பதக்க வீராங்கனைகள் சாய்னா நேவால், மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் தேர்தல்களில் பெண்கள் வாக்களிப்பின் பங்கீடு மிகவும் குறைவாக உள்ளது. இதே நிலை ஆந்திர மாநிலத்திலும் நிலவுகிறது. வாக்குரிமையை ஊக்குவிக்கும் விதமாக தேர்தல் கமிஷன், விழிப்புணர்வு மற்றும் வாக்குபதிவில் பெண்களின் பங்கினை அதிகரிக்க ஒலிம்பிக் பதக்க வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் மெரி கோம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் இந்திய கிரிகெட் வீரர் எம்.எஸ் தோனி ஆகியோர் வாக்களிப்பதின் முக்கியதுவத்தை அறிவுறுத்த தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.