Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக்பால் மசோதா நகலை எரிப்பு: ஹசாரேவுக்கு கபில் சிபல் கண்டனம்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (19:41 IST)
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவின் நகலை எரிப்பது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அண்ணா ஹசாரேவுக்கு மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் நீதித் துறையினருக்கு விலக்கு அளித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மற்றும் அவரது அதரவாளர்கள் இன்று அம்மசோதாவின் நகல்களை எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்த செயல் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று கண்டனம் தெரிவித்தார்.

அரசு கொண்டுவந்துள்ள மசோதா மீது ஹசாரேவுக்கு மாற்று கருத்து இருக்குமானால், அது தொடர்பான அவரது கருத்துக்களை நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும், அந்தக் குழு அதுகுறித்து பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments