Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்தேவ் போராட்டம்: அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை

Webdunia
வியாழன், 2 ஜூன் 2011 (19:07 IST)
கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள யோகா குரு ராம்தேவ் விவகாரம் குறித்து இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ராம்தேவ் விவகாரம் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இதுபற்றி கேட்கப்பட்டபோது, இல்லை என்று பதிலளித்தார்.

மேற்கொண்டு இது தொடர்பாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்த சிதம்பரம்,நாங்கள் 24 மணிநேரமும் தகவல்களை அளித்துக்கொண்டிருக்க முடியாது என்றும், தேவைப்பட்டால் தகவல் தரப்படும் என்றும் கூறினார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சையில் வசமாக சிக்கிக் கொண்டுள்ள தயாநிதி மாறன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டாரா என்ற கேள்விக்கு, ஆம் என்றார் சிதம்பரம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments