Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்தேவ் உடல்நிலை மோசமடைந்தது

Webdunia
புதன், 8 ஜூன் 2011 (16:44 IST)
ஹரித்வாரில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் பாபா ராம்தேவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியுள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவரவும், ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி,டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பாபா ராம்தேவ், அங்கிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்தப்படார்.

இருப்பினும் அவர் தமது கோரிக்கையை வலியுறுத்தி ஹரித்வாரில் தொடர்ந்து 5 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியுள்ளது.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் திரவம் அருந்துமாறும், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.ஆனாலும் அவர் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து, எடையும் குறையத் தொடக்கி உள்ளது. மேலும் நீர்ச்சத்து குறைவாலும் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஹரித்வாரின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் யோகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments