2ஜி வழக்கில் தமக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்காக தாம் தயாராக இருந்ததாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.
2ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க கோரி ஜனதா கட்சி தலைவர்,சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முன்னதாக நீதிமன்றம் அளிக்கும் இந்த தீர்ப்புதான் ப. சிதம்பரத்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று கூறப்பட்ட நிலையில்,இத்தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தமக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சிதம்பரம்,2ஜி வழக்கில் தமக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்காக தாம் தயாராக இருந்ததாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.