Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராக்கிங் செய்தால் வழக்கு : உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

Webdunia
ராக்கிங் செய்யும் மாணவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனறு கல்வி நிறுவனங்களுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பசாயத் எ °.எச்.கபாடியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது.

ராக்கிங் நடக்கும் போது சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது அந்த கல்வி நிறுவன அதிகாரிகளின் பொறுப்பாகும். பாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ நேரடிடையாக காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.

ராக்கிங் தொடர்பாக வழக்குகளை நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் ராக்கிங் செய்யும் எண்ணம் மாணவர்களுக்கு வராது. பாடத்திட்டத்தில் ராக்கிங் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

மாணவர் அனுமதி தொடரபான விளக்க கையேட்டிலேயே நான் ராக்கிங்கில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எழுதிவாங்க வேண்டும். இந்த உறுதிமொழி மீறப்படும் பட்சத்தில் அந்த மாணவர்களை கல்வி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றலாம்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments