Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகிங்கை தடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு

Webdunia
வெள்ளி, 8 மே 2009 (16:42 IST)
புதுடெல்லி: கல்லூரிகளிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் ராகிங் கொடுமையை முற்றிலும் ஒழிப்பதற்காக மாநில அரசுகள் குழுக்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கல்வி நிறுவனங்களில் இருந்து ராகிங்கை முற்றிலுமாக ஒழிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரிஜித் பசாயத் தலைமையிலான நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் ஆல்கஹாலுக்கு அடிமையாகி இருந்தால், அவற்றில் இருந்து அவர்களை மீட்கவும் கல்வி நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு உளவியல் வல்லுனரை நியமிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராகிங்கை ஒழிப்பதற்கு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments