Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே ஊழியர் மர்ம கும்பலால் கற்பழிப்பு

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2013 (12:36 IST)
FILE
கர்நாடகா மாநிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ரயில்வே ஊழியர் ஒருவர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூப்லியில் ரயில்வேவில் பணியாற்றி வரும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியரை அவரது ரயில்வே குவாட்டர்ஸ் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண், மயக்கம் தெளிந்து எழுந்தப்போது ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார்.

இது தொடர்பாக ஹுப ்ல ி - தர்வாத் காவல் துறை ஆணையர் பத்மநாயன் தெரிவிக்கையில், 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக ரயில்வே ஊழியர் ஒருவர் புகார் அளித்துவுள்ளார்.

தற்போது ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனக் கூறியுள்ளார்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!