Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயில்வே ஊழியர் மர்ம கும்பலால் கற்பழிப்பு

ரயில்வே ஊழியர் மர்ம கும்பலால் கற்பழிப்பு
, சனி, 3 ஆகஸ்ட் 2013 (12:36 IST)
FILE
கர்நாடகா மாநிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ரயில்வே ஊழியர் ஒருவர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூப்லியில் ரயில்வேவில் பணியாற்றி வரும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியரை அவரது ரயில்வே குவாட்டர்ஸ் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண், மயக்கம் தெளிந்து எழுந்தப்போது ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார்.

இது தொடர்பாக ஹுப்லி - தர்வாத் காவல் துறை ஆணையர் பத்மநாயன் தெரிவிக்கையில், 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக ரயில்வே ஊழியர் ஒருவர் புகார் அளித்துவுள்ளார்.

தற்போது ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனக் கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil