Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்யா மீது புகார் அளித்த காங்கிரஸ் கட்சியினர்?

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2013 (11:51 IST)
FILE
கர்நாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ரம்யா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் இந்திய நடிகையான ரம்யா, தற்போது மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், இவர் மீது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரிடம் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாண்டியா மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் உள்பட சில நிர்வாகிகள் அக்கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரை சந்தித்து ரம்யா மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது.

அந்த புகாரில், ரம்யா இடைத்தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பாஜக பெண் நிர்வாகி ஒருவரை சந்தித்துள்ளார். இது குறித்து கேட்டதற்கு அவர் ஒழுங்கான பதில் அளிக்கவில்லை. மாறாக அரசு அதிகாரிகளுக்கு சரியான மரியாதை அளிக்காமல் அவர்களை ஒருமையில் அழைக்கிறார்.

மேலும், தொகுதியில் எந்த முடிவு எடுத்தாலும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு செய்யாமல் செயல்படுகிறார் எனக் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பொதுமக்களுக்கு குடிநீர் வர நடவடிக்கை எடுக்காத ஹனுமந்தையா என்னும் பொறியாளரை வரவழைத்து விளக்கம் கேட்ட ரம்யா அவர் சரியான விளக்கம் தராததால் அவரை 'முட்டாள்' என்று திட்டினார் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments