Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரக்சா பந்தன்: மன்மோகன், அன்சாரி வாழ்த்து

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (17:58 IST)
ரக்சா பந்தன் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்த பண்டிகை நமது பாரம்பரியமிக்க குடும்ப உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது. நமக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை களையவும், சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும் இதுபோன்ற பண்டிகைகள் நமக்கு ஓர் நல்ல வாய்ப்பாக அமைகிறது. இந்த பண்டிகை அனைவருக்கும் இனிமையாக அமையட்டும்" என்று வாழ்த்தியுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ரக்சா பந்தன் பண்டிகை சகோதர, சகோதரிகள் இடையே பாசப்பிணைப்பை வலுவாக்கும் பண்டிகையாக திகழ்கிறது. சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் அன்பை உணர்த்துவதில் இந்த பண்டிகை முக்கியப் பங்கு வகிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments