Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரக்சா பந்தன்: மன்மோகன், அன்சாரி வாழ்த்து

ரக்சா பந்தன்: மன்மோகன், அன்சாரி வாழ்த்து
புதுடெல்லி: , செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (17:58 IST)
ரக்சா பந்தன் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்த பண்டிகை நமது பாரம்பரியமிக்க குடும்ப உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது. நமக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை களையவும், சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும் இதுபோன்ற பண்டிகைகள் நமக்கு ஓர் நல்ல வாய்ப்பாக அமைகிறது. இந்த பண்டிகை அனைவருக்கும் இனிமையாக அமையட்டும்" என்று வாழ்த்தியுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ரக்சா பந்தன் பண்டிகை சகோதர, சகோதரிகள் இடையே பாசப்பிணைப்பை வலுவாக்கும் பண்டிகையாக திகழ்கிறது. சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் அன்பை உணர்த்துவதில் இந்த பண்டிகை முக்கியப் பங்கு வகிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil