அமெரிக்கா வழங்கும் இராணுவ உதவியை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் திருப்பிவிடுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி குற்றம் சாற்றியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்களை தலிபானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது என்றார்.
இது மிகவும் தீவிரமாக கவனிக்க வேண்டிய விவகாரம். இதுகுறித்து அமெரிக்காவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இதில் இறுதித்தீர்வு காணப்படும்வரை அமெரிக்காவிடம் இதுகுறித்து தெரிவித்துக் கொண்டே இருப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.