மோடி இந்தியர்: அவருக்கு குடியுரிமை சான்றிதழ் தேவையில்லை – ஆர் டி ஐ தகவல் !

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (09:33 IST)
பிரதமர் மோடி தனது குடியுரிமை சான்றிதழைக் காட்ட வேண்டும் என்ற வழக்குக்கு ஆர் டி ஐ மூலமாக பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்தால் நாடு முழுவதும் கலவரங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பிரிவினரான பிறப்பு சான்றிதழை அடிப்படையாக வைத்து அரசு என்ஆர்சி கொண்டு வரப் பட போவதாக தெரிகிறது. ஒருவர் தான் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழைக் காட்ட வேண்டும் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் தற்போது ஒருவர் பிறந்திருந்தாலும் அவரது தந்தை அல்லது அவரது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்களுக்கு முறையான பிறப்புச் சான்றிதழ் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்ரீசுபாங்கர் சர்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோடியின் குடியுரிமை சான்றிதழைக் காட்டுமாறு கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம் மோடி இந்திய குடிமகன் என்றும், அவர் பிறப்பால் இந்தியர் என்ற அந்தஸ்தை பெறுவதால் அவருக்கு குடியுரிமை சான்றிழ் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments