Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி ஆர்.எஸ்.எஸ். ரவுடி, ராஜ்நாத் சிங் மோடியின் அடிமை - பேனி பிரசாத் வர்மா கடும் தாக்கு!

மோடி ஆர்.எஸ்.எஸ். ரவுடி, ராஜ்நாத் சிங் மோடியின் அடிமை - பேனி பிரசாத் வர்மா கடும் தாக்கு!
, புதன், 2 ஏப்ரல் 2014 (15:32 IST)
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரவுடி என்றும், ராஜ்நாத் சிங் மோடியின் அடிமை என்றும் கொண்டா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பேனி பிரசாத் வர்மா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Beni Prasad Verma
மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா உத்தர பிரதேச மாநிலம் கொண்டா தொகுதியில் போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் தலைவர் ராஜ்நாத் சிங்கை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
 
மாகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவே காரணம். மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரவுடி, ராஜ்நாத் சிங் மோடியின் அடிமை என்று பேனிபிரசாத் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
webdunia
Modi is goon of RSS
மேலும், பாரதீய ஜனதா கட்சியில் மூத்த தலைவர் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகுவது தொடர்பாக பேசிய பேனி பிரசாத் வர்மா, பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களை தனித்து விடுகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா மோடியிடம் விலை போய்விட்டனர் என்று பேசினார்.
 
ஏற்கனவே தராப்கஞ்ச் பகுதியில் சாலையோரம் நின்று வாக்கு சேகரிப்பில் பேனி பிரசாத் ஈடுபட்டிருந்தபோது அவருடன் ஏராளமான வாகனங்களில் தொண்டர்கள் சென்றனர். இந்த வாகனங்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.






 
 
அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவிலான வாகனங்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவது, தேர்தல் நடத்தை விதி மீறிய செயல் ஆகும். எனவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பறக்கும்படை பொறுப்பு அதிகாரி வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil