Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோகன் பாபு, பிரமானந்தம் பத்மஸ்ரீ விருதை ஒப்படைக்க உத்தரவு

மோகன் பாபு, பிரமானந்தம் பத்மஸ்ரீ விருதை ஒப்படைக்க உத்தரவு
, செவ்வாய், 24 டிசம்பர் 2013 (17:44 IST)
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர்களான மோகன் பாபு மற்றும் பிரமானந்தம் அவர்களுக்கு அளிக்கப்பட்பத்மஸ்ரீயை விருதை திரும்ப அளிக்கவேண்டுமென ஐதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
FILE

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் ஆகிய இருவருக்கும் 2007 மற்றும் 2009-ம் ஆண்டு முறையே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு மோகன்பாபு தயாரித்த 'தேனிகைனா ரெடி' என்ற திரைப்படைத்தின் நன்மதிப்பிற்காக பத்மஸ்ரீ பட்டத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தியதாக பாரதிய ஜனதா தலைவர் இந்திரசேனா ரெட்டி என்பவர் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாண் ஜோதி சென்குப்தா மற்றும் சஞ்சய்குமார் கூறுகையில், படத்தின் விளம்பரத்திற்காக பத்மஸ்ரீ பட்டத்தை நடிகர் மோகன்பாபுவும், பிரமானந்தாவும் தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர். இது அந்த பட்டத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே அவர்கள் இருவரும் பத்மஸ்ரீ பட்டத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil