Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்குவங்க மாநிலத்தில் ஒருவருக்கு எபோலா அறிகுறி

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (16:28 IST)
மேற்குவங்க மாநிலத்தில் எபோலா அறிகுறியுடன் தென்பட்ட ஒரு வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை என்றால் அது கண்டிப்பாக எபோலா வைரஸ் என்றால் அது மிகையாகாது.
 

முதலில் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இந்நோயால் பலர் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். பின் இந்நோய் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவியது.

இதனால் விமான நிலையங்களில் மருத்துவர் குழுவை நியமித்து பரிசோதனை செய்த பிறகே வெளிநாட்டு பயணிகளை அவரவர் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் எபோலா அறிகுறியுடன் தென்பட்ட ஒரு வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 26 வயது அலிப் தாஸ் என்ற அந்த வாலிபர் சமீபத்தில் லைபீரியா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். எனவே அவருக்கு நோயின் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ராய்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments