Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்குவங்க மாநிலத்தில் ஒருவருக்கு எபோலா அறிகுறி

மேற்குவங்க மாநிலத்தில் ஒருவருக்கு எபோலா அறிகுறி
, செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (16:28 IST)
மேற்குவங்க மாநிலத்தில் எபோலா அறிகுறியுடன் தென்பட்ட ஒரு வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை என்றால் அது கண்டிப்பாக எபோலா வைரஸ் என்றால் அது மிகையாகாது.
 

முதலில் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இந்நோயால் பலர் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். பின் இந்நோய் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவியது.

இதனால் விமான நிலையங்களில் மருத்துவர் குழுவை நியமித்து பரிசோதனை செய்த பிறகே வெளிநாட்டு பயணிகளை அவரவர் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் எபோலா அறிகுறியுடன் தென்பட்ட ஒரு வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 26 வயது அலிப் தாஸ் என்ற அந்த வாலிபர் சமீபத்தில் லைபீரியா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். எனவே அவருக்கு நோயின் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ராய்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil