Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்குவங்கம்: தொழிலாளர்கள் 3 பேர் சுட்டுக்கொலை

மேற்குவங்கம்: தொழிலாளர்கள் 3 பேர் சுட்டுக்கொலை
அசன்சால் , வியாழன், 2 ஜூன் 2011 (19:39 IST)
மேற்குவங்க மாநிலத்தில் தொழிலாளர்கள் 3 பேர் 12 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேற்கு வங்காள மாநிலம் அசன்சால் நகரில் கோர்ட் மோர் என்ற இடத்தில் கட்டடம் ஒன்று கட்டும் பணி, இன்று காலை நடந்து கொண்டு இருந்தது.

அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த 12 பேர் கொண்ட கும்பல், அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதில் கட்டடக் கட்டுனர் லகான் யாதவ், அவருடைய பாதுகாவலர், ஒரு கட்டட தொழிலாளி ஆகிய 3 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் இறந்தனர்.மேலும் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil