Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெளனவிரதத்தை முடித்தார் அன்னா ஹசாரே

மெளனவிரதத்தை முடித்தார் அன்னா ஹசாரே
புதுடெல்லி , வெள்ளி, 4 நவம்பர் 2011 (12:31 IST)
அன்னா ஹசாரே இன்று காலை தனது 19 நாள் மௌனவிரதத்தை முடித்துக் கொண்டார்.

தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் இருந்து நேற்று இரவு ஹசாரே டெல்லி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை காந்தி சமாதி அமைந்திருக்கும் ராஜ்காட் சென்ற அவர், தனது 19 நாள் மெளனவிரதத்தை முடித்துக் கொண்டார்.

மெளனவிரதத்தை முடித்ததும் "பாரத் மாதா கி ஜெய்!" என முதல் வார்த்தையாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர்," ஊழல் அமைப்புக்கு எதிராகவே நான் போராடி வருகிறேன். மெளன விரதத்தை எந்த கட்சிக்கு எதிராகவும் மேற்கொள்ளவில்லை. உண்ணாவிரதத்துக்குப் பிறகு எனது உடல்நிலை பலவீனமாக இருந்தது.

இந்நிலையில் மகாத்மா காந்தி கூறியபடி மெளனவிரதத்தைத் தொடங்கினேன். மெளனவிரதத்துக்குப் பிறகு இப்போது முற்றிலும் நலமாக இருக்கிறேன்.

லோக்பாலுக்காக போராட இப்போது மேலும் ஆர்வமாக உள்ளேன்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil