முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரளா தந்திர யோசனை

Webdunia
புதன், 4 ஜனவரி 2012 (16:07 IST)
முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டினால் இரு மாநில கூட்டு குழுவின் கட்டுப்பாட்டில் செயல்பட தயாராக இருப்பதாக கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:

இரு மாநிலங்கள் இடையே சிறுவாணி அணை நீர் பங்கீடு ஒப்பந்தம் இருந்து வருகிறது.அது போல் புதிய அணை இரு மாநில கூட்டு குழுவின் கட்டுப்ப ாட ்டில் செயல்பட கேரளா தயாராக உள்ளது.புதிய அணையில் கேரளா நீர் கேட்காது.

அண்டை மாநிலத்துடன் ஒரு இணக்கமான தீர்வு வேண்டும்.அணையின் கீழ் வாழ்பவர்களுக்கு ஒவ்வொரு கணமும் பாதுகாப்பு முக்கியம். அதே நேரத்தில் அண்டை மாநில மக்களுக்கு தண்ணீர் வேண்டும்.

நாங்கள் தமிழ்நாடு உடன் விவாதிக்க திறந்த மனதுடன் இருக்கிறோம். ஏதாவது பிரச்னை இருந்தால், தமிழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

Show comments