Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை ரயில் ஸ்டிரைக் வாபஸ்

Webdunia
செவ்வாய், 4 மே 2010 (17:46 IST)
மும்பையில் புறநகர் ரயில்களை இயக்கும் மோட்டார்மேன்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மும்பையில் புறநகர் ரயில்களை இயக்கும் மத்திய மற்றும் மேற்கு ரயில்வே மோட்டார்மேன்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.இதனால் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில் மோட்டார்மேன்களின் இந்த போராட்டத்திற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இதனிடையே போராட்டம் நடத்திய மோட்டார்மேன்களுடன் மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மோட்டார்மேன்கள் தங்களது போராட்டத்தை இன்று மாலை வாபஸ் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக 80 மோட்டார்மேன்கள் பணிக்கு திரும்பினர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments