Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி: தொழில் அதிபர் கைது

Webdunia
வியாழன், 16 ஜூலை 2009 (10:26 IST)
மாவோயிஸ ்ட ் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி செய்துவந்த டெல்லி தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட ்ட னர்.

டெல்லியில் இருந்து ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு சரக்குப் பெட்டகம் ஒன்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 60 மோட்டோரோலா வயர்லெஸ் கருவிகள், 60 நவீன ரேடியோ வயர்லெஸ் கருவிகள், 60 சார்ஜர்கள், 54 பேட்டரி செட், 10 டிரான்சிஸ்டர்கள், 2 ஒர்ல்ட் பேண்ட் ரிசீவர், 6 மைக்ரோ கேசட் ரெக்கார்டர்கள் மற்றும் குண்டு துளைக்காத கவச ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட நவீன கருவிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த கருவிகளை நரேஷ் சர்மா என்ற தொழிலதிபர ், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக நரேஷ் சர்மாவை கைது செய்த காவல்துறையினர், அவர் கொடுத்த தகவலின் பேரில் பிரபல ஆயுத வியாபாரியான பிரவீன் சர்மா என்பவரையும் பிடித்தனர். இவர்கள் இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments