Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மமதாவுக்கு எதிராக கட்சி எம்.பி. போர்க்கொடி!

Webdunia
வியாழன், 1 மார்ச் 2012 (13:12 IST)
மேற்குவங்க மாநிலத்தில் கற்பழிப்பு, அரசியல் வன்முறை மற்றும் இதர குற்றங்கள் அதிகரித்து வருவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு எதிராக அவரது சொந்த கட்சி எம்.பி.யே போர்க் கொடிம் உயர்த்தியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் ஜாதாவ்பூர் மக்களவை தொகுதியிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கபிர் சுமன் என்ற எம்.பி.யே இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மாநில முதலமைச்சரும், தமது கட்சித் தலைவருமான மமதா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கூறிய குற்றச்சாட்டை கூறியுள்ள அவர், விவசாயிகள் தற்கொலை செய்து வருவதாகவும், ஏராளமான அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியை சேர்ந்தவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்றே வன்முறை பாதையை பின்பற்றுவதாகவும் அவர் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments