Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மமதாவுக்கு எதிராக கட்சி எம்.பி. போர்க்கொடி!

மமதாவுக்கு எதிராக கட்சி எம்.பி. போர்க்கொடி!
கொல்கத்தா , வியாழன், 1 மார்ச் 2012 (13:12 IST)
மேற்குவங்க மாநிலத்தில் கற்பழிப்பு, அரசியல் வன்முறை மற்றும் இதர குற்றங்கள் அதிகரித்து வருவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு எதிராக அவரது சொந்த கட்சி எம்.பி.யே போர்க் கொடிம் உயர்த்தியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் ஜாதாவ்பூர் மக்களவை தொகுதியிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கபிர் சுமன் என்ற எம்.பி.யே இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மாநில முதலமைச்சரும், தமது கட்சித் தலைவருமான மமதா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கூறிய குற்றச்சாட்டை கூறியுள்ள அவர், விவசாயிகள் தற்கொலை செய்து வருவதாகவும், ஏராளமான அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியை சேர்ந்தவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்றே வன்முறை பாதையை பின்பற்றுவதாகவும் அவர் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil