Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மோகன் சிங் ராஜினாமா செய்யட்டும்: பா.ஜனதா காட்டம்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2010 (18:09 IST)
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை எதிர்கொள்ளட்டும் அல்லது ராஜினாமா செய்துவிட்டு போகட்டும் என்று பா.ஜனதா காட்டமாக கூறியுள்ளது.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று தே.ஜ.கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊழலுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி, மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளான பி.ஜே. தாமஸை நியமித்தததற்காகவும் பிரதமரை அவர் கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களும், அதிகார தரகர்களுமே அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை எடுப்பதாக குற்றம் சாற்றிய அவர், நாடளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கவில்லை என்றால், ராசா தொலை தொடர்புதுறை அமைச்சராக நீடித்திருப்பார் என்று மேலும் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments