Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசுப் பணிக்குச் செல்கிறார் ஃபரூக்கி

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2009 (11:36 IST)
சென்னை: தமி​ழக தொழில்துறை செய​லா​ளராக உள்ள எம்.எஃப். ஃபரூக்கி, மத்​திய அரசுப் பணிக்குச் செல்கிறார். மத்திய சுற்றுச்​சூ​ழல் துறை​ கூடு​தல் செய​லா​ள​ராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுற்றுச்சூழல் துறையின் பங்கு மிக அதிகமாக உள்ள நிலையில் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்படும் ஃபரூக்க, அந்தத் துறையின் மூத்த அதிகாரியாக நியமி்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து த​மி​ழக தொழில்துறை​ புதிய செய​லா​ள​ராக,​ வணிக வரி​ மற்​றும் பத்​திர பதி​வுத் துறை​யின் செய​லா​ளர் ராஜீவ் ரஞ்​சன் நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதனால் முதன்மை செயலாளரும், வணிக வரித்துறை ஆணையருமான டி.ஜேக்கப், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் முதன்மை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக இருக்கும் முதன்மை செயலாளர் வி.கே.ஜெயக்கொடி, வணிகவரித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு அடிப்​ப​டை​யில் ஃபரூக்கி மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன் பின்னணியில் திமுக-காங்கிரஸ் அரசியல் உறவும் இருக்கலாம் என்று தெரிகிறது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையிலும், நிதித்துறையிலும் பணியாற்றியுள்ள ஃபரூக்கி, சவுதி அரேபியாவில் துணைத் தூதராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments