ஊழல் கருப்பு பணத்திற்கு எதிராக இன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்காக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மாலை வரை கெடு விதிக்கிறேன் என யோகா குரு ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.
கருப்பு பணத்தை மீட்க கோரி, யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் , கடந்த 9-ம தேதி துவக்கினார்.
இந்நிலையில் இன்று அவர் கூறுகையில், தனது கோரிக்கை நிறைவேறாவிட்டால் புரட்சி வெடிக்கும் எனவும், இன்று மாலை 5 மணிக்குள் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெடு விதித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு தனது அடுத்த கட்ட முடிவு குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.