Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (17:30 IST)
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சக்தி வாய்ந்த குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறின.

இன்று காலை அந்த கார் நிறுத்தப்பட்டதாகவும், அதில் உள்ள பதிவு எண் உண்மையானதா அல்லது போலியானதா? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் மாளிகைக்குள் அந்தக் கார் எப்படி வந்தது? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

பங்கேய் பயிற்சி மையத்திற்கு அந்தக் காரை தள்ளிச் சென்ற காவல்துறையினர், காரில் இணைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததாகவும் அரசு வட்டாரங்கள் கூறின.

வெடிகுண்டுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments