Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த 2 விமானிகள் கைது

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2011 (13:36 IST)
போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் 2 விமானிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் விமானிகளாக வேலை பார்த்து வந்த அனூப் சவுத்திரி, அமித் மோந்திரா ஆகிய இருவரும் விண்ணில் பறந்த நேரம் பற்றிய விவரத்துக்கு போலி சான்றிதழ் கொடுத்து,பயணிகள் விமானத்தை ஓட்டும் உரிமத்தை பெற்றதாக இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே ராஜஸ்தான் விமானி பயிற்சி நிறுவன தலைமை பயிற்சியாளர் கேப்டன் மொகீந்தர் குமார், ஜெய்ப்பூர் விமான நிலைய அதிகாரி மனோஜ் ஜெயின் ஆகியோர் கைதாகி இருக்கிறார்கள்.

இதில் மொகீந்தர் குமார், ரூ.11 லட்சம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் கொடுத்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments