Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த 2 விமானிகள் கைது

போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த 2 விமானிகள் கைது
புதுடெல்லி , செவ்வாய், 22 மார்ச் 2011 (13:36 IST)
போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் 2 விமானிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் விமானிகளாக வேலை பார்த்து வந்த அனூப் சவுத்திரி, அமித் மோந்திரா ஆகிய இருவரும் விண்ணில் பறந்த நேரம் பற்றிய விவரத்துக்கு போலி சான்றிதழ் கொடுத்து,பயணிகள் விமானத்தை ஓட்டும் உரிமத்தை பெற்றதாக இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே ராஜஸ்தான் விமானி பயிற்சி நிறுவன தலைமை பயிற்சியாளர் கேப்டன் மொகீந்தர் குமார், ஜெய்ப்பூர் விமான நிலைய அதிகாரி மனோஜ் ஜெயின் ஆகியோர் கைதாகி இருக்கிறார்கள்.

இதில் மொகீந்தர் குமார், ரூ.11 லட்சம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் கொடுத்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil