தெலுங்கு பட உலகை சேர்ந்தவர்கள் பலர் போதை பொருள் கடத்தலில் கைதாவது தொடர்ந்து நடந்துவருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் ரவி தேஜாசகோதரர்கள் ரகுநாத ராஜூ, பரத்ராஜூ ஆகியோர் போதை பொருள் வாங்கும்போது காவலர்களால் பிடிபட்டனர்.சினிமா துறையை சேர்ந்த மேலும் பலருக்கு போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சோதனை நடந்துவந்தது.