Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதையில் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்

போதையில் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்
, திங்கள், 1 ஏப்ரல் 2013 (16:17 IST)
FILE
ஆந்திராவில் போதை பழக்கத்திற்கு அடிமையான பெண் ஒருவர், குடிபோதையில் அவர் பெற்ற 3 குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தானும் கிணற்றில் குதித்தார். இச்சம்பவத்தால் 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், நவாப் பேட்டையை சேர்ந்த ஒரு பெண், நேற்று மாலை 4 மணியளவில் ஷில்பா (7), அக்னி (6), சரண் (2) ஆகிய தனது 3 குழந்தைகளையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு, தானும் கிணற்றில் குதித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமவாசிகள், உடனடியா நான்கு பேரின் உயிரை காக்க நடவடிக்கை மேற்கொண்டபோதும், அந்த பெண்ணை மட்டும்தான் உயிருடன் மீட்கமுடிந்தது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான அந்த பெண், மன குழப்பத்தால் இந்த கொடூர செயலை செய்திருக்கலாம் என கிராமவாசிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil