பெட்ரோல் விலை உயர்வை கண்டுத்து டெல்லியில் இன்று சாலை மறியல் நடத்தப்படும் என்று பா.ஜ.கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் விஜயேந்தர், 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தி இருக்கிறது. இதனால் விலைவாசி மேலும் உயரும். ஏழை மக்கள் மேலும் துன்பம் அடைவார்கள்.
கடந்த 8 மாதங்களில் பெட்ரோல் விலை 15 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு ஏழை மக்களை மிகவும் பாதித்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் இன்று 5 இடங்களில் பா.ஜ.க சார்பில் சாலை மறியல் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.