Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் சிசுக் கொலை: பஞ்சாப் முதலிடம்

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2009 (19:50 IST)
புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பெண் சிசுக் கொலை குறித்த பட்டியலில் நாட்டிலேயே பஞ்சாப் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், ராஜஸ்தான் அதற்கு அடுத்தபடியாக வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் பெண் சிசுக் கொலை தொடர்பான குற்றங்கள் மொத்தம் 294 பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற பதிவேட்டு அமைப்பின் பஞ்சாப் மாநில பிரிவு வெளியிட்ட தகவல் தெரிவிப்பதாக மாநிலங்களவையில் சுகாதாரத் துறை இணையமைச்சர் தினேஷ் திரிவேதி எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 81 வழக்குகளும், ராஜஸ்தானில் 51 வழக்குகளில் பெண் சிசுக் கொலை தொடர்பாக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 21 வழக்குகளும், ஹரியானாவில் 18ம், சட்டீஸ்கரில் 24 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டுவாரியாக பதிவான வழக்குகளையும் அமைச்சர் மாநிலங்களவையில் பட்டியலிட்டார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments