Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: மக்களவை 15 நிமிடங்கள் தள்ளிவைப்பு

Webdunia
வியாழன், 2 ஜூலை 2009 (12:23 IST)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதலாவது பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 15 நிமிடங்கள் தள்ளிவைக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், முதன் முறையாக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முந்தையை மக்களவையில் இருந்ததை விட இம்முறை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலம் குறைந்ததால் இடையூறுகள ், அமளிகள் பெருமளவில் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலையுயர்வு தொடர்பான விவாதத்தின் போது, மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 15 நிமிடங்கள் மக்களவை நடவடிக்கைகளை தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

இதன் பின்னர் மீண்டும் அவை துவங்கியுள்ள நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையுயர்வு மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments