Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், கேஸ் விலை குறைப்பு 10 நாளில் அறிவிக்கப்படும்

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (17:47 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு அடுத்த 10 நாட்களில் வெளியிடப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தின்ஷா பட்டேல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகுறைப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

விலை குறைப்பு குறித்து நிதியமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு வெளியிடப்படும் என்றும், கண்டிப்பாக விலை குறைப்பு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நடுத்தர மக்கள், விவசாயிகள், இந்த விலை குறைப்பு மூலம் நிவாரணம் பெறுவார்கள் என்று கூறிய தின்ஷா பட்டேல், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விலை குறைப்பு எவ்வளவு என்பது பற்றி விவாதித்து முடிவு செய்யப்படும் என்றார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments