Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருவில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் கைது

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2009 (18:54 IST)
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் துப்பாக்கிகளை கடத்தியவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தாவூத் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவர்கள் பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முகமது அயூப் (28), ஃபைரோஸ் (32), அன்சார் (22) என்ற பெயர் கொண்ட அவர்களிடம் இருந்து ஒரு பிஸ்டல் மற்றும் 3 கைத்துப்பாக்கிகளும், துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

கர்நாடக மாநிலத்தில் ஆயுத தொழிற்சாலை நடத்தி வந்ததும், அமெரிக்க முத்திரையுடன் துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சித்ரதுர்காவில் அருகே மதரஸாவில் தங்கியிருந்து, பல்வேறு பகுதிகளுக்கும் ஆயுதங்களைக் கடத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments