புகையில ை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.22 லட்சத்தை மத்திய சுகாதார அமைச்சகம் ஒதுக்கியுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் இது தொடர்பான பிரச்சனை க ள ் குறித்த ு ஆராய்வதற்காக தேசிய ஆலோசனை கருத்தரங்கை புதுடெல்லியில் அவர் இன்று துவக்கி வைத்தார்.
புகையிலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தற்போதைய சட்டங்களைப் பற்றியும், இந்திய புகையில ை க ் கட்டுப்பாட்டுச் சட்டம் 2003-ஐ சிறப்பாக அமல்படுத்துவது பற்றியும் இந்த இரண்டு நாள் கருத்தரங ் கில ் ஆலோசிக்கப்படுகிறது.