பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளக்கட்சித் தலைவருமான லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவி தோல்வியடைந்துள்ளார்.
ராக்போர் மற்றும் சோன்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களிலுமே தோல்வியை தழுவியுள்ளார் ராப்ரி.
அதேப்போன்று லாலுவின் மைத்துனர்களான சாது யாதவ் மற்றும் சுபாஷ் யாதவ் ஆகிய இருவருமே தோல்வியை தழுவியுள்ளனர்.
இதில் சாது யாதவ், காங்கிரஸ் வேட்பாளராக கோபால்கன்ஞ் தொகுதியிலும், சுபாஷ் பிக்ராம் தொகுதியில் சுயேட்சையாகௌம் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.