Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் ராகுல் பாச்சா பலிக்கவில்லை: காங்கிரஸ் ஒப்புதல்

Webdunia
புதன், 24 நவம்பர் 2010 (18:34 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்களார்களில் கவருவதில் ராகுல் காந்திக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்வதாக காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.

பீகார் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை தனித்து போட்டியிட வைத்து வெற்றிபெற வைப்பேன் என்று சூளுரைத்த ராகுல் காந்தியின் விருப்பப்படியே அக்கட்சி தனித்து போட்டியிட்டது.

இத்தேர்தலுக்காக ராகுல்காந்தி பீகாரில் பல முறை வலம் வந்து, ஏழைகளின் குடிசைகளுக்கெல்லாம் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் காங்கிரஸ் தலைவர் ஒருவர், பீகாரில் ராகுல்காந்தி தோல்வியடைந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள்வதாகவும், பீகார் மக்களை கவர்வதில் அவருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments