Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பில் கட்டாததால் கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு மின்சாரம் கட்

பில் கட்டாததால் கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு மின்சாரம் கட்
, புதன், 6 பிப்ரவரி 2013 (12:54 IST)
FILE
சரியாக மின்சார கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மும்பையிலுள்ள கிங்ஃபிஷர் தலைமை அலுவலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டிருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனம் அண்மை காலமாக பெரும் நஷ்டத்தை சந்தித்துவருகிறது. நிறுவன ஊழியர்களுக்கு சரிவர வருமானம் அளிக்காத காரணத்தால் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமம் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் மும்பை மாநிலம் அந்தேரியிலுள்ள கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மின்சார இணைப்பு நேற்று காலைமுதல் துண்டிக்கப்பட்டுள்ளது.

பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் கிங்ஃபிஷர் நிறுவனம் சரியாக மின்சார கட்டணம் செலுத்தாததே மின்சார வாரியத்தின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு காரணம் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil