Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகைக்கு நடுரோட்டில் அடி, உதை - மக்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2013 (18:54 IST)
மும்பையில் பிரபல நடிகை ஒருவர் பட்டப்பகலில் நடுத்தெருவில் அடித்து உத ைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FILE

மும்பையில் கடந்த வாரம் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டுள்ள சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் குறையாத நிலையில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் பட்டப்பகலில் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை புறநகரில் லவ்லீன் கவுர் என்னும் டி.வி. நடிகையை பொதுமக்கள் முன்னிலையில் 3 பேர் அடித்து உதைத்ததுள்ளனர்.

லவ்லீன் கவுர், ஆட்டோவில் சென்றபோது, அவரிடம் இருந்த கைப்பையை ஒரு நபர் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினான். உடனே ஆட்டோவில் இருந்து இறங்கிய கவுர், அந்த நபரை துரத்தி பிடிக்க முயன்றார்.

ஆனால், சிறிது நேரத்தில் அவனுடன் மேலும் இரண்டு வாலிபர்கள் சேர்ந்து, கவுரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தும், யாரும் தடுக்க முன்வரவில்லை.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த கவுர் உதவி கேட்டு அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் ஒருவனைத் தேடி வருகின்றனர்.

நாடு முழுவதும் தொடர்கதையாகியுள்ள பெண்களுக்கு எதிராக குற்றங்கள், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!