Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல ஓவியர் தயிப் மேத்தா மரணம்

பிரபல ஓவியர் தயிப் மேத்தா மரணம்
மும்பை , வியாழன், 2 ஜூலை 2009 (11:32 IST)
இந்தியாவின் பிரபல ஓவியர்களில் ஒருவரான தயிப் மேத்தா (Tyeb Mehta) இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 83.

மும்பையில் உள்ள வீட்டில், மனைவி சகீனா, மகன், மகளுடன் வசித்து வந்த தயிப் மேத்தா கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனினும், ஓவியம் தீட்டுவதில் அவருக்கு இருந்த ஆர்வம் சற்றும் குறையவில்லை என அவரது மனைவி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை அவர் உடல்நலக் குறைவால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தயிப் மேத்தாவின் ‘காளி’ எனப் பெயரிடப்பட்ட ஓவியம் ரூ.ஒரு கோடிக்கு மேல் விலை போனது. இதேபோல் மற்றொரு அற்புதப் படைப்பான ‘செலிப்ரேஷன’ ரூ.1.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil