Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் அலுவலகம் அருகே இளைஞர் தீக்குளிப்பு

Webdunia
ஞாயிறு, 15 பிப்ரவரி 2009 (12:55 IST)
டெல்லியில் பிரதமர் அலுவலகம் அருகே இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி விஜய் சவுக் பகுதியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகம் அமைந்துள்ளது. இப்பகுதியில், நேற்று பிற்பகல் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணெ‌ய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை உடனடியாக மீட்டு தீயை அணைத்தனர். எனினும் அவரது உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீக்குளித்த இளைஞர் பெயர் அபிஷேக் குமார் (32) என்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் எதற்காக அவர் தீக்குளித்தார் என்பது தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரதமர் அலுவலகம் அருகே இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments