ஒஸாமா பின்லேடனின் உடலை அமெரிக்கா கடலில் வீசி இருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்த திக் விஜய் சிங்கிற்கு காங்கிரஸ் மேலிடம் சம்மன் அனுப்பியுள்ளதாக செய்தி வெளியான நிலையில், அவர் அதனை மறுத்துள்ளார்.
போபாலில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், இந்த செய்தியை தாமும் முற்றிலும் மறுப்பதாக கூறினார்.
முன்னதாக பின்லேடன் உடலில் கடலில் வீசப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருந்த திக் விஜய் சிங், எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும், அவரது உடலை புதைக்கும்போது அவர் சார்ந்த மதச் சடங்குகளை நடத்தும் மரியாதையை அளித்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.