நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியுள்ள பா.ஜ.க. எம்.பி.க்களை கூட்டத் தொடரில் இருந்து நீக்கும் எண்ணமில்லை என மக்களவைத் தலைவர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடவடிக்கைகளை முடக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன், பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்த முடிவாக இருக்கும் என்றார்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டை காரணம் காட்டி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர்.
இந்நிலையில், இனி வரும் நாட்களில் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறும் என மீரா குமார் நம்பிக்கை தெரிவித்தார்.