பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் விடுத்துள்ள அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், லஷ்கர் ஈ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதி அபு ஜுண்டால் இந்திய உளவுத்துறை நிறுவனத்தை சார்ந்தவர் என கூறியிருந்தார்.
இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய உள்துறை செயலாளர் ஆர். கே.சிங், மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது அபு ஜுண்டால் பாகிஸ்தானில் லஷ்கர் ஈ தொய்பாவிற்காக பணியாற்றி கொண்டிருந்தான் என தெரிவித்தார்.